புரோ கபடி லீக் போட்டியின் 100-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டான் அணியிடம், தமிழ் தலைவாஸ் அணி வீழ்ந்தது.
5ஆவது புரோ கபடி லீக் போட்டியின் 100-ஆவது லீக் ஆட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, தீபக் ஹூடா தலைமையிலான புணேரி பால்டான் அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதல் பாதியில் 12-11 என்ற கணக்கில் புள்ளிகள் பெற்று முன்னிலை வகித்த தமிழ் தலைவாஸ் அணி, இரண்டாம் பாதியை 8-22 என்ற புள்ளிக்கணக்கில் கோட்டையிட்டது. இதனால் மொத்த புள்ளிகள் அடிப்படையில் 33-20 என்ற புள்ளிக்கணக்கில் புணேரி பால்டான் அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி, 8ஆவது ஆட்டத்தில் தொல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும், தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.