18-ஆவது ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.
இன்று நடைபெற்ற கபடி போட்டியின் 3-வது ஆட்டத்தில் இந்திய அணியைத் தோற்கடித்து அதிர்ச்சியளித்துள்ளது தென் கொரிய அணி.
2016 கபடி உலகக் கோப்பைப் போட்டியிலும் தென் கொரியாவிடம் இந்திய அணி தோற்றது. எனினும் பிறகு கோப்பையை இந்திய அணி வென்றது.
இன்றைய போட்டியில் ஆரம்பம் முதலே தென் கொரிய அணி இந்தியாவுக்குக் கடும் சவாலை அளித்தது. முதல் பாதியில் அந்த அணி, 14-11 என முன்னிலை பெற்றிருந்தது. கடைசிக்கட்டத்தில் சிறப்பாக விளையாடி இந்தியாவைத் தோற்கடித்து கவனத்தை ஈர்த்தது கொரிய அணி.
ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்திய கபடி அணி சந்திக்கும் முதல் தோல்வி இது. இந்திய அணி நாளைய ஆட்டத்தில் தாய்லாந்தைச் சந்திக்கிறது.