டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் தோற்று வெண்கலம் வென்றுள்ள இந்திய அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.
டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் தோற்று வெண்கலம் வென்றுள்ள இந்திய அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் தென் கொரியாவும் மோதின. சரத் கமல், ஜி.சத்யன், ஆண்டனி அமல்ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 0-3 என்கிற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் கொரிய அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்தது. இந்திய அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

ஆசியப் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com