ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் தென் கொரியாவும் மோதின. சரத் கமல், ஜி.சத்யன், ஆண்டனி அமல்ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 0-3 என்கிற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் கொரிய அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்தது. இந்திய அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.
ஆசியப் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது.