உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் முன்னேறி வெள்ளிக்கிழமை சென்னை திரும்பினார்.
காங்கிரஸ் கட்சியின் 13 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நவம்பர் 29-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் தலைவர்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து சாதாரண வார்டுக்கு டிசம்பர் 30-ஆம் தேதி மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், அவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து அவர் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை சென்னை திரும்பினார்.