திண்டுக்கல் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மொனாக்கோ நாட்டு இளவரசி சார்லேன் மௌன அஞ்சலி செலுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நத்தம் அடுத்துள்ள பன்னியாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்லேன் பங்கேற்றார். பின்னர் நொச்சியோடைப்பட்டி அடுத்துள்ள புனித வளனார் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இளவரசி சார்லேன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் புனித வளனார் தொழில் நுட்பக் கல்லூரி தாளாளர் நெப்போலியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் திண்டுக்கல் வந்த சார்லேனை, மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வரவேற்றார்.