உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.
ஒரு உதவி செயற்பொறியாளர் மேற்பார்வையில், ஒரு உதவிப் பொறியாளர், கண்காணிப்பாளர், இரண்டு உதவியாளர்கள் ஆகியோருடன் நாள்தோறும் சுழற்சி முறையில் செயல்படும் இந்த கட்டுப்பாட்டு அறையை 18004257012 என்ற இலவச தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் 24 நேரமும் புகார் தெரிவிக்கலாம்.
இதோடு, புகார் அனைத்தும் கணினியில் பதிவு செய்து உடனே சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.