சிவகாசி பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு கிடங்கில் பட்டாசுகளை மினி லாரியில் ஏற்றிய போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.


சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு கிடங்கில் பட்டாசுகளை மினி லாரியில் ஏற்றிய போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

தீ விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்களில் 5 பெண்கள் உட்பட 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பட்டாசுக் கிடங்கில் இருந்து மினி லாரியில் பட்டாசுகளை ஏற்றிய போது, ஊராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் பட்டாசுகளை ஏற்றிக் கொண்டிருந்த 8 தொழிலாளிகள் காயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவித்தன. மேலும் 1 தொழிலாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து, 25 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர். விபத்து நேரிட்ட பட்டாசு கிடங்குக்கு அருகே இருந்த ஸ்கேன் மையத்தில் இருந்தும் நோயாளிகள் வேகமாக வெளியேற்றப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com