மதுரை: மதுரை, நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் சுமார் 500 பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டதாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பனீஸ்வர ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, போலி ஆவணங்களைத் தந்து பாஸ்போர்ட் பெற்ற 500 பேரின் இசிஎன்ஆர் பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
தவறான மற்றும் போலி ஆவணங்கள் தந்து பாஸ்போர்ட் பெற்ற 500 பேர் மீதும் குற்றவழக்கு பதிவு செய்யக்கோரி போலீஸாருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.