கோவை: கோவையில் ஐஏஎஸ் அகாடமியில் இன்று மாலை நேரிட்ட பட்டாசு வெடி விபத்தில் மாணவர் ஒருவர் பலியானார்.
கோவை காந்தி நகர் அருகே உள்ள பட்டாசு குடோனில் வெடி விபத்து நேரிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதன்பிறகு, ஐஏஎஸ் அகாடமியில் வெடி விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
ஐஏஎஸ் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட வைக்கப்பட்டிருந்த பட்டாசு கிப்ட் பேக்கினால் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் 3 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.