சென்னை: தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தல் பிரசாரத்தில் திமுக முன் வைக்கப் போகும் பிரச்னை குறித்து மு.க. ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்தார்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. நிர்வாக சீர்கேடுகளை முன்னிறுத்தியும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை முன் வைத்தும் திமுக பிரசாரம் மேற்கொள்ளும்.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றால் திமுக தான் வெற்றிபெறும் என்று ஸ்டாலின் கூறினார்.