சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் குடிபோதையில் அதிவேகமாக ஓட்டி வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.
லட்சுமண் என்ற ஆட்டோ ஓட்டுநர், பயணி ஒருவரை ஏற்றிக் கொண்டு தரமணியில் இருந்த மத்திய கைலாஷ் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதிய வேகத்தில் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், ஆட்டோ ஓட்டுநர் லட்சுமண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதில் பயணித்த பயணிக்கு கை முறிவு ஏற்பட்டது.
காரில் வந்தவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர். அதிகமான போதையில் இருந்த ஒருவர் மட்டும் தப்பியோட முடியாமல் பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரனணை செய்து வருகின்றனர்.