சென்னை: சென்னை வேளச்சேரி அருகே பணிமனையில் பழுதுபார்க்கும் பணி நடந்து கொண்டிருந்த போது பறக்கும் ரயிலின் எஞ்ஜினில் திடீரென தீப்பிடித்தது.
பறக்கும் ரயிலின் எஞ்ஜினில் தீப்பிடித்தது குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பழுதான ரயில் எஞ்ஜினில் வெல்டிங் பணி நடந்த போது திடீரென தீப்பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.