அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்: அரசாணை ரத்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்: அரசாணை ரத்து

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக தமிழக கருவூலம் தெரிவித்துள்ளது.

இது குறித்து  தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளம் 28ம் தேதியே வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால், இது குறித்து வெளியிடப்பட்ட தமிழக அரசாணை செல்லாது என்று தமிழக கருவூலத் துறை கடிதம் ஒன்றை வெளியிட்டது.

அதில், தமிழக அரசு ஊழியர்களுக்கு வழக்கம் போலதான் இம்மாதமும் 31ம் தேதி சம்பளம் வழங்கப்படும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com