ஜெயலலிதா குணமடைந்து விட்டார்; அதிசயம் நடந்துவிட்டது: சுப்ரமணியன் சுவாமி டிவீட்

தமிழக முதல்வர் ஜெயலலிதா சுய நினைவுக்குத் திரும்பிவிட்டார். விரைவில் வீடு திரும்புவார் என்று பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா குணமடைந்து விட்டார்; அதிசயம் நடந்துவிட்டது: சுப்ரமணியன் சுவாமி டிவீட்


புது தில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா சுய நினைவுக்குத் திரும்பிவிட்டார். விரைவில் வீடு திரும்புவார் என்று பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி, இன்று மதியம் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா  குறித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில், ஜெயலலிதாவின் தொண்டர்கள் மகிழ்ச்சி அடையலாம். ஜெயலலிதா சுய நினைவுக்கு திரும்பி விட்டதாகவும், அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளது. அப்படியிருந்தால் அது ஒரு அதிசயம் தான் என சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com