சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டம் காரணமாக அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் கட்டணமின்றி சென்று வருகின்றன.
தீபாவளியை முன்னிட்டு 45 நாள் போனஸ் கோரி சுங்கச் சாவடி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓமலூர் சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் பணி நடைபெறாததால், அவ்வழியாக இயக்கப்படும் வாகனங்கள் கட்டணமின்றி செல்கின்றன.