தமிழ்நாடு
சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு: நாளைக்கு ஒத்திவைப்பு
சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது 1996-ம் ஆண்டில் அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிலா தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆஜராகததால் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே வழக்கில் நேரில் ஆஜராவதற்கு பதில் காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்க கோரி சசிகலா தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.