அதிமுகவின் திசையை தீர்மானிக்க காலம் தந்த தலைவன் டி.டி.வி.தினகரன்: நாஞ்சில் சம்பத்

அதிமுகவின் திசையை தீர்மானிக்க காலம் தந்த தலைவன் டி.டி.வி.தினகரன் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
அதிமுகவின் திசையை தீர்மானிக்க காலம் தந்த தலைவன் டி.டி.வி.தினகரன்: நாஞ்சில் சம்பத்

சென்னை: அதிமுகவின் திசையை தீர்மானிக்க காலம் தந்த தலைவன் டி.டி.வி.தினகரன் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

சென்னையில் டி.டி.வி. தினகரன் அடையாறு இல்லத்தில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பிறகு அதிமுக அம்மா அணி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தினகரன் தலைமையில் தான் அதிமுக செயல்படும். இந்தக் கட்சியை வலுவோடும் பொலிவோடும் தினகரன் வழி நடத்துவார்.

தில்லியில் இருக்கும் பாஜகவின் அற்பத்தனமான மிரட்டுலுக்கு பயந்து ஆதாயச் சூதாடிகள் எடுக்கிற முடிவுகள் எங்களைக் கட்டுப்படுத்தாது.

அதிமுக உடையவில்லை. ஜெயக்குமாரை நிதி அமைச்சராக உட்கார வைத்து அழகு பார்த்ததே தினகரன் தான். தினகரன் தலைமையில் அதிமுக விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com