சென்னை: சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் சுமார் 75க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் ஸ்ரீ கோகுலம் சிட் பைனான்ஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னையில் கோடம்பாக்கம் உள்பட 36 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில், சென்னை, கோவை, புதுச்சேரி, பெங்களூர், கேரளா உள்ளிட்ட 78 இடங்களில் 500 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.