விவசாயிகளுக்கு ஆதரவாக 25ஆம் தேதி முழுஅடைப்பு போராட்டம்! தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு

வரும் 25 ஆம் தேதி நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. 
விவசாயிகளுக்கு ஆதரவாக 25ஆம் தேதி முழுஅடைப்பு போராட்டம்! தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு

வரும் 25 ஆம் தேதி நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. 

தில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்துவது என திமுக சார்பில் அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. மேலும் இப்போராட்டத்துக்கு வணிகர்கள் ஆதரவு தரவேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. ஏற்கெனவே வணிகர் தினத்தை முன்னிட்டு மே 5ஆம் தேதி தமிழகத்தில் கடைகள் விடுமுறை அறிவித்துள்ள நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 25ஆம் தேதி கடை அடைப்பு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டலத் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் பல்வேறு வணிக அமைப்புகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் அறிவித்துள்ள 25ஆம் தேதி முழுஅடைப்பு போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக வரும் 25 ஆம் தேதி நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com