சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் மற்றும் முத்துநகர், நெல்லை, நீலகிரி, மங்களூரு என 4 விரைவு ரயில்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய மேலாளருக்கு மாவோயிஸ்ட் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பிய ஒய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கங்காதரன் அரக்கோணம் அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரது நான்கு நண்பர்களையும் போலீஸார் பிடித்து அரக்கோணம் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.