திருவாரூர்: திருவாரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், திருவாரூரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இந்நிலையில், மாவட்ட பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஸ்டாலின் அங்கு திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவருடன் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பாலு, சட்டப்பேரவை உறுப்பினர் மன்னை டி.ஆர்.பி. ராஜா, குடவாசல் பேரூர் திமுக செயலாளர் முருகேசன், ஒன்றியச் செயலாளர்கள் ஜோதிராமன், பிரபாகரன், கலியபெருமாள், பாலச்சந்திரன் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.