அதிமுகவை யாராலும் மிரட்டி அடிபணிய வைக்க முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுகவை யாராலும் மிரட்டி அடிபணிய வைக்க முடியாது என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
அதிமுகவை யாராலும் மிரட்டி அடிபணிய வைக்க முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுகவை யாராலும் மிரட்டி அடிபணிய வைக்க முடியாது என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
மதுரை ஆவின் பால் பண்ணையில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், அதிமுக தொண்டர்களின் கட்சி. இதை யாராலும் மிரட்டி அடிபணிய வைக்கவோ, அழிக்கவோ முடியாது. கட்சியின் கட்டுப்பாட்டைக் காப்பதற்காகவே தொண்டர்கள் அமைதி காத்து வருகின்றனர். அதிமுக தொண்டர் கூட்டம், திரையரங்கில் விசில் அடித்து வளர்ந்த கூட்டம், எதற்கும் அஞ்சாது. உரிய உத்தரவு கிடைத்தால் போதும். எதிரிகளின் சதியை முறியடித்துவிடும் என்றார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், அடுத்த 4 ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி மக்களின் ஆதரவுடன் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றார்.
வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், அதிமுக அரசை செயல்படாதது என விமர்சனம் செய்கின்றனர். ஆனால், வறட்சிக்காக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுதான் அதிக நிதியைப் பெற்றிருக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக விவசாயிகளுக்குப் போராடுவதைப் போல திமுக, எதிர்க்கட்சிகளைக் கூட்டி போராட்டம் நடத்தியது. ஆட்சியையும், கட்சியையும் பாதுகாக்க எந்த தியாகத்தையும் செய்ய அதிமுகவினர் தயாராக உள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com