மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டவுடன், குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 500 கன அடியிலிருந்து 2,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்படும்.
கடந்த 10 நாள்களாக மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 8 மணிமுதல் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆடி பெருக்குக்கு திறப்பு?: இந்த நிலையில், ஆடி மாதம் 18-ஆம் நாள் விழா ஆகஸ்ட் 3-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக காவிரி ஆற்றில் பொதுமக்கள் நீராட வசதியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கால்வாய் பாசனத்துக்கு திறப்பு இல்லை?: அணையின் கால்வாய் பாசனம் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,433 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11,337 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கரும் என பாசன வசதி பெறுகிறது.
கடந்த ஆண்டில் போதிய நீர் இருப்பு இல்லாததால், குடிநீர்த் தேவைக்காக ஆகஸ்ட் 7 முதல் 19-ஆம் தேதிவரை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.
நடப்பு ஆண்டில் நீர் இருப்பு குறைந்தே உள்ளதால், கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com