புதுக்கோட்டை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கிய புதுக்கோட்டை நிலப்பதிவாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சோட்டை மாவட்ட நிலப்பதிவாளராக இருந்த சசிகலா, விருதுநகர் மாவட்ட நிலப்பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் இருந்த விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலத்தை முடக்க வருமான வரித்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட நிலப்பதிவாளராக இருந்த சசிகலா அதனை செயல்படுத்தினார். இந்த நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.