மதுரை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை? கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மத்திய அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்காக 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த வழக்கில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைக்கப்படும் என்று ஆய்வு செய்து அறிவிக்க எத்தனை நாள் ஆகும்? மருத்துவமனை அமைக்க எவ்வளவு காலம் ஆகும்? என்று கேள்விகளை எழுப்பியுள்ளது.
மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்ய குழு அமைத்துள்ளோம் என்ற மத்திய அரசின் பதிலை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.