டிடிவி தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நிச்சயம் வருவார் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
டிடிவி தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நிச்சயம் வருவார். அவர் வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. கட்சியை மேம்படுத்தும் திறமை தினகரனுக்குத்தான் உள்ளது. பொதுச் செயலாளர் யார் என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானிக்க முடியாது. பொதுச் செயலாளருக்கே அதிகாரம் உள்ளது.
தேர்தல் ஆணையம் எல்லாவற்றையும் தீர்மானித்து விட முடியாது. ஒபிஎஸ் ஆர்ப்பாட்டம் என அறிவித்ததில் இருந்து சேகர்ரெட்டிக்கு தூக்கமில்லை. தினகரன் குறித்து பேசாதது பற்றி முதல்வரிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.