சென்னை: குஜராத்தில் ராகுல் காந்தி சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஏராளமான காங்கிரஸார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர், குஜராத்தில் ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய போதும், அவர்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிடவில்லை.