சென்னையில் பகுதி சந்திர கிரகணம்

சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் ஒரு மணி நேரம் தெரிந்த பகுதி சந்திர கிரகணத்தை திங்கள்கிழமை இரவு 600-க்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் தெரிந்த பகுதி சந்திர கிரகணம். (படம் ஏ.எஸ்.கணேஷ்.)
சென்னை நுங்கம்பாக்கத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் தெரிந்த பகுதி சந்திர கிரகணம். (படம் ஏ.எஸ்.கணேஷ்.)

சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் ஒரு மணி நேரம் தெரிந்த பகுதி சந்திர கிரகணத்தை திங்கள்கிழமை இரவு 600-க்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் டாக்டர் பி.ஐயம்பெருமாள் தினமணி நிருபரிடம் கூறியதாவது: சூரியன்-பூமி-சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் பகுதியில் சந்திரன் நகர்ந்து செல்லும்போது, அதன் ஒளி சற்று குறைவாகக் காணப்படும்.
இந்தியா, ஐரோப்பா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் திங்கள்கிழமை இரவு 10.48-க்கு முழுமையான பகுதி சந்திர கிரகணம் தொடங்கி, இரவு 11.43 மணி வரை தெரிந்தது. எனினும் நள்ளிரவு 12.48 மணி வரை பகுதி சந்திர கிரகணம் நீடித்தது.
4 தொலைநோக்கிகள் மூலம்...கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் பகுதி சந்திரகிரகணத்தைப் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 600-க்கும் மேற்பட்ட வானியல் ஆர்வலர்கள் 4 தொலைநோக்கிகள் மூலம் பகுதி சந்திரகிரகணத்தைப் பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com