சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படுவதாக தமிழக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:
தமிழ்நாடு மாநில விற்பனை ஆணையத்தில் (டாஸ்மாக்) பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டாஸ்மாக் மது விற்பனையகத்தில் பணியாற்றும் மேற்பார்வையாளர்களுக்கு சம்பளமானது ரூ. 7500-இல் இருந்து ரூ.9500 ஆக உயர்த்தப்படுகிறது.
விற்பனையாளர்களுக்கு சம்பளமானது ரூ. 5600 -இல் இருந்து ரூ.7500 ஆக உயர்த்தப்படுகிறது.
அதேபோல் விற்பனை உதவியாளர்களுக்கு சம்பளமானது ரூ. 4200 -இல் இருந்து ரூ.6500 ஆக உயர்த்தப்படுகிறது.
இந்த ஊதிய உயர்வுகள் அனைத்தும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
அதேநேரம் இதுவரை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விற்பனை ஊக்கத்தொகையானது நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.