சென்னை: தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
அப்போது அவர் பேசுகையில், அதிமுக 3 அணிகளாக செயல்படத் தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். மக்களின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.