சசிகலா தலைமையில் உள்ளதுதான் உண்மையான அதிமுக என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சசிகலா தலைமையில் உள்ளதுதான் உண்மையான அதிமுக. அதிமுகவில் 3 அணிகள் இருப்பதாக கூறுவதில் உண்மையில்லை. அகமது படேல் எதிரி என்பதால் குஜராத் மாநிலங்களவை தேர்தலில் தோற்கடிக்க முயற்சித்தோம்.
வழக்குகளில் சிக்கியுள்ள காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி. தமிழகத்தில் தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அவசியம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.