கரூர் நிதிநிறுவனங்களில் 3 ஆவது நாளாக வருமான வரி சோதனை

கரூரில் உள்ள தனியார் நிதிநிறுவனங்களில் தொடர்ந்து 3 ஆவது நாளாக சனிக்கிழமையும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

கரூரில் உள்ள தனியார் நிதிநிறுவனங்களில் தொடர்ந்து 3 ஆவது நாளாக சனிக்கிழமையும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

கரூர்- கோவை சாலையில் உள்ள 3 நிறுவனங்கள் மற்றும் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஒரு நிறுவனம் என 4 நிதி நிறுவனங்களில் கோவை வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 20 பேர் கொண்ட குழுக்களாக வந்த அதிகாரிகள் 3ஆவது நாளாக சனிக்கிழமையும் இந்த சோதனை தொடர்ந்தது.
புதிய வாகனங்களுக்கு கடன் வழங்கி வரும் இந்த நிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளாகவே வரவு-செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாமல் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com