திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 14 நாள்களில் ரூ.27.89 லட்சத்தை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
திருத்தணி முருகன் கோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள், கோயில் உண்டியலில் காணிக்கையாக, பணம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை செலுத்துகின்றனர். இந்நிலையில், கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, தக்கார் வே. ஜெய்சங்கர், இணை ஆணையர் செ. சிவாஜி, மாவட்ட உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 27,89,710 ரொக்கம், 77 கிராம் தங்கம், 3,298 கிராம் வெள்ளி ஆகியன பக்தர்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தன. இது கடந்த 14 நாள்களில் கிடைத்த உண்டியல் காணிக்கை ஆகும்.