நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், மத்திய, தமிழக அரசுகளுக்கு தனது சுட்டுரை பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது சுட்டுரை பக்கத்தில், "நீட் தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்' என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம்: இதனிடையே தனது சுட்டுரைப் பக்கத்தின் மற்றொரு பதிவில், உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது என நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"குழந்தைகள் நலன் செயல்பாட்டாளர் கைலாஷ் சத்யார்த்தி அவர்களே, உத்தரப்பிரதேச முதல்வரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துங்கள். இனியும் உயிரிழப்புகள் கூடாது. குழந்தைகளின் மரணத்துக்கு இந்தியாவே இரங்கல் தெரிவிக்கிறது' என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ள்ளார்.