மர்மக் காய்ச்சலால் பள்ளி மாணவர் சாவு

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் சனிக்கிழமை மர்மக் காய்ச்சலால் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் சனிக்கிழமை மர்மக் காய்ச்சலால் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

பூஞ்சோலையைச் சேர்ந்தவர் பெருமாள். மனைவி சக்தீஸ்வரி. மகன் சண்முகப்பாண்டி (5). தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 15 நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சண்முகப்பாண்டியை, அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை சண்முகப்பாண்டி மயக்கமடைந்து விழுந்தார். அவரை மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, சின்னாளப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சண்முகப்பாண்டியை அழைத்துச் சென்ற போது, அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக
தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com