தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடதமிழகம், தென்தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்யலாம். அதிகபட்சமாக அண்ணா பல்கலைக்கழத்தில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.