சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜவேலிடம் ரூ.2.43 லட்சம் மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் மீது 2010ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடார்பான வழக்கு கோவை 2ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே சுகேஷ் சந்திரசேகர் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி தற்போது தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.