மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேரின் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சியை மே 21 -ஆம் தேதி (மே 21) அனுமதியின்றி நடத்த முயன்றதாக, மே பதினேழு
இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட, நான்கு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான வழக்கில் திருமுருகன் காந்தி உட்பட 4 பேரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோரின் காவலை வரும் 24ஆம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.