சென்னை: அதிமுக அணிகள் இணைவதற்கு நான் தடையாக இல்லை என முன்னாள் அமைச்சரும், பன்னீர்செல்வம் ஆதரவாளுருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தர்மயுத்தத்தின் மூலக்கரு நிறைவேற்றப்படவில்லை எனில் அணிகள் இணைப்பு சாத்தியமில்லை என்றார்.
மேலும், சசிகலா நீக்கப்படும்வரை இணைப்புக்கான சாத்தியம் குறித்து என்னால் எதுவும் கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
ஓ பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவுக்கு முழுமையாக நாங்கள் கட்டுப்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.