சென்னை: ஆவடி அருகே மின்சாரம் பாய்ந்து மின் வாரிய ஊழியர் மாரிமுத்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
ஆவடியை அடுத்த பாண்டேஸ்வரத்தில் நேற்று பெய்த கனமழையால் மின்கம்பம் பழுதானது.
இதையடுத்து இன்று காலை பழுதான மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, மாரிமுத்து என்ற மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.