திண்டிவனம் அருகே லாரி மீது கார் மோதல்: 2 பேர் சாவு

திண்டிவனம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

திண்டிவனம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (35). சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் அண்மையில் ஊர் திரும்பினார்.
இவர், தனது மகன் காதணி விழாவுக்கு சென்னையில் உள்ள உறவினருக்கு பத்திரிகை வைப்பதற்காக சனிக்கிழமை இரவு தஞ்சாவூரில் இருந்து காரில் புறப்பட்டார். காரை தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அரவிந்த்(21) என்பவர் ஓட்டி வந்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில், கார் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மேல்பேட்டை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரிலிருந்து சலவை சோப்பு, சலவைத் தூளை ஏற்றிக்கொண்டு, சென்னை நோக்கி செல்வதற்காக, சாலையோரம் எவ்வித சமிக்ஞைகளும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த கிருஷ்ணமூர்த்தி, ஓட்டுநர் அரவிந்த் ஆகியோர் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
சடலங்களை ரோஷணை போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக, லாரி ஓட்டுநர் கரூரைச் சேர்ந்த பழனிச்சாமி (35) என்பவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com