சென்னை: சட்டப்பேரவைத் தலைவர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தலைமைச் செயலகத்தில் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி நடத்தும் அவசர ஆலோசனையில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து, முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா மனு கொடுத்திருக்கும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் விரைவில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.