விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

மன்னார்குடியை அடுத்த கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட திருக்களர் தொடக்க வேளாண்மை சங்கத்தில், பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து புதன்கிழமை விவசாயிகள் காத்திருப்புப்
திருக்களர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
திருக்களர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

மன்னார்குடியை அடுத்த கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட திருக்களர் தொடக்க வேளாண்மை சங்கத்தில், பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து புதன்கிழமை விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.
திருக்களர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், திருக்களர், அக்கரைக்கோட்டகம் ஆகிய ஊராட்சி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்தும், இதுநாள் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படாததை கண்டித்தும், தாமதப்படுத்தாமல் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் போராட்டம் நடத்தினர். 
போராட்டத்திற்கு திமுக (தெ) ஒன்றிய துணைச் செயலர் தங்க.வேல்முருகன் தலைமை வகித்தார். திமுக கோட்டூர்(வ) ஒன்றியச் செயலர் பால.ஞானவேல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். திமுக (தெ) ஒன்றியச்செயலர் வி.எஸ்.ஆர்.தேவதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் க.மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் எல்.சண்முகவேல், தேமுதிக ஒன்றியச் செயலர் எம்.எஸ்.கோவிந்தராஜ் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் பி.பரந்தாமன், திமுக ஒன்றிய விவசாய அணி செயலர் டி.மோகன்,விவசாய சங்க செயலர் ஆர்.தனபால், இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட துணைத் தலைவர் பி.லிட்டன்மேரி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com