ஆர்.கே.நகரில் முன்னாள் எம்எல்ஏ உள்பட தினகரன் ஆதரவாளர்கள் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று முதல் தங்களது பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட மண்ணப்ப முதலி தெருவில் மதுசூதனனுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர் காந்தி நேற்று பிரசாரம் செய்திருக்கிறார். அப்போது அவரது வாகனம் மீது தினகரன் ஆதரவாளர்கள் சோடா பாட்டில் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
உடனே இதுதொடர்பாக காந்தி கொருக்குப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைத் தொடர்ந்து தினகரன் ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.