சபரிமலையில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய நாட்டின் பலப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைகளுக்கு பிறகே, பம்பையில் இருந்து சபரிமலைக்கு செல்ல காவலர்களால் அனுமதிக்கப்படுகின்றனர்.
நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருவதால், சுமார் 5 மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்வதாக பக்தர்கள் கூறுகின்றனர்.