சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை சென்னை திரும்பினார்.
தைராய்டு பிரச்னைக்குச் சிகிச்சை பெறுவதற்காக விஜயகாந்த் சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றார்.
தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்ற அவர் விமானம் மூலம் வியாழக்கிழமை சென்னை திரும்பினார். அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்று வந்தார். சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்தை தேமுதிக நிர்வாகிகள் வரவேற்றனர்.