ஆர்.கே. நகரில் காரணமின்றி ஆதரவாளர்கள் கைது: டிடிவி தினகரன்

ஆர்.கே. நகரில் தனது ஆதரவாளர்கள் காரணமின்றி கைது செய்யப்படுவதாக டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆர்.கே. நகரில் காரணமின்றி ஆதரவாளர்கள் கைது: டிடிவி தினகரன்

ஆர்.கே. நகரில் தனது ஆதரவாளர்கள் காரணமின்றி கைது செய்யப்படுவதாக டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆர்.கே நகரில் வருகிற 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லாக்கானியை, டிடிவி தினகரன் இன்று சந்தித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
ஆர்.கே. நகரில் எனது ஆதரவாளர்களை காரணமின்றி காவல்துறையினர் கைது செய்கின்றனர். உண்மையாகவே தேர்தல் சரியாக நடக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். 

ஆர்.கே.நகரில் அதிகாரிகள், காவல்துறையினர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். தொண்டர்கள் மீது நடவடிக்கை தொடர்ந்தால் காவல்துறை மீது நீதிமன்றத்தில் முறையிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com