ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 23 ஆம் தேதி வருகை தரவுள்ளார்.
பின்னர் ராமேசுவரம் பேக்கரும்பு ஊராட்சியில் உள்ள குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் நினைவிடத்தினையும் பார்வையிட இருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு ராமேசுவரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன.