100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாகவும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் அங்கு பல்வேறு இடங்களில் புதன்கிழமை விழிப்புணர்வு பிரசாரம்

ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாகவும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் அங்கு பல்வேறு இடங்களில் புதன்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில், பல்வேறு வகையான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி புதன்கிழமை வார்டு }41, கொருக்குப்பேட்டை பெரியார் சாலையில் மனித சங்கிலி விழிப்புணர்வும், வார்டு }40, காமராஜர் சாலையில் வண்ண கோலமிட்டும், சுனாமி குடியிருப்பில் கையெழுத்து பிரசாரமும் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, ஜீவா நகரில் மோட்டார் சைக்கிள் பேரணி மூலமும், மீன்பிடி படகுகள் நிறுத்தும் பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு பணி நடைபெற்றது. 
மேலும், வார்டு }39, புது மார்க்கெட் முதல் தெருவில் பறையடித்து நடனமாடி பிரசாரமும், புது மார்க்கெட் 2 }ஆவது தெருவில் பொம்மை நாடகத்தின் மூலமும், வார்டு}42, புத்தா சாலை, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோலப் போட்டி நடத்தியும் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
விழிப்புணர்வு பிரசாரத்தில் தேர்தலின்போது அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதன் மூலம் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியும் என்பதை எடுத்துரைத்தும், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என பொதுமக்களுக்கு கூறப்பட்டது எனஅந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com