அதிமுகவுக்கு ஆதரவான காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய திமுக வலியுறுத்தல்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படும் காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படும் காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. 
சென்னை தலைமைச் செயலகத்தில் ராஜேஷ் லக்கானியை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மாவட்டச் செயலாளர் சுதர்சனம், வழக்குரைஞர் அணிச் செயலாளர் கிரிராஜன் உள்ளிட்டோர் புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனர். அதன் விவரம்:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வடசென்னை காவல் இணை ஆணையர் தொடங்கி காவல் ஆய்வாளர்கள் வரை 11 அதிகாரிகள் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் தொடர்ந்து பண விநியோகம் செய்து வருகின்றனர். இதனை அதிமுக ஆதரவு காவல் துறையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர். 
பணவிநியோகத்தைத் தடுக்க முற்பட்ட பறக்கும் படையினரைக் காவல் துறையினர் முன்னிலையில் சிலர் தாக்கிய சம்பவம்கூ ட செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. எனவே, அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படும் காவல் துறை அதிகாரிகளை, ஆர்.கே. நகர் தொகுதி அல்லாத வேறு இடத்துக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்படும் 11 காவல் துறை அதிகாரிகளின் பட்டியலும் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் 
அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com